search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் புகார்"

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே இளம்பெண்ணை கடத்தியதாக கல்லூரி மாணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் சவுமியா (வயது19) இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சவுமியாவின் தோழிகளிடம் விசாரித்தபோது அவர் ஒரு வாலிபருடன் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சவுமியாவின் தந்தை ராஜசேகர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஸ் (22) தனது மகளை கடத்தி சென்றதாக கூறி உள்ளார்.

    இதன் பேரில் சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்.
    ×